முத்தம்

சத்தமின்றி சலனம் செய்கிறாய்
மிச்சமின்றி சரசம் செய்கிறாய்!

கன்னம் தொட்டு களவு செய்கிறாய்
கண நேரத்தில் காதலை கவிதையில் சொல்லி செல்கிறாய்!

இதழில் கவிதை எழுதிவிட்டாய்
இருளில் கதை பேசி முடித்துவிட்டாய்!

முத்த சத்தங்கள் இட்ட இடங்கள்
மேளங்கள் கொட்டி போனதே!

அந்தி வரும் முன்னே
மனம் தந்தனத்தோம் பாடுதே!

கொலுசின் ஓசையும்
வளையல் ஓசையும்
எனை எள்ளி நகையுதே!

மெட்டி ஓசை மட்டும்
உன் வரவுக்காக நித்தம் வாடுதே!





Comments

Popular posts from this blog

நேசம்

வாசமல்லிகை