வாசமல்லிகை
தொடுக்க முடியா மலர் இது
நீ தொட முடியா மலர் இது
வாடிய மலரிடம்
வாசனை தேடுகிறாய்
நீ தொடுக்க நான் மல்லிகை அல்ல
மடிந்து விட்ட அலர்
நாரெடுத்து வந்து விட்டாய்
நான் நாண்டு நாட்கள் ஆனதை மறந்து
வண்ணமும் போனது
வசந்தமும் வழி மாறிப்போனது.
வாசமல்லிகை தான் நான்
வசந்தத்தை இழந்த
வாசமல்லிகைதான்!
Nice
ReplyDelete