என் காதலை சொல்லிடவா

நீ இல்லாத தேசத்தில்
பூ வாசம் செய்யாது.

நீ மனதில் நுழைந்த நேரம்
என் மேனி எங்கும் புது வாசம்
காணுது.

தொட்டுத் துரத்தி வருகிறாய்
தொட நினைத்தபோது
நிழலாய் சென்று மறைகிறாய்.

வாய்மொழி கூட மறந்தேனே
பேசா நேரமெல்லாம்
மூச்சு கூட பந்தய குதிரை ஆனதே.

பந்தலில் மனப்பந்தலில்
மகிழ்ந்திட வாராயோ!

விரல் கூட நனைந்துபோனது
என் நாணம் மட்டும் உனை கண்டு
கலைந்து போகாதோ!

சொல்லிட வா
என் காதலை சொல்லிட வா!

Comments

Popular posts from this blog

நேசம்

முத்தம்

வாசமல்லிகை