சிறையை விட்டு சிறகை விரித்து வா

காயம்படும் போது மட்டும்
கண்ணீர் வரச் செய்கிறாய்

காதலில் மட்டும்
கருணை தர மறுக்கிறாய்

சொல்ல வார்த்தைகளை
தேடி வைத்தேன்

வார்த்தையிலே
எனை தொலைத்தேன்

கதாநாயகன் நானல்ல
உன் கனவு நாயகன்
நானல்லவா.

கதை பேசிட வரவா
கவிதையிலே
வடித்த வரிகளை

மன இறகில் செதுக்கிடவா
மன சிறகை விரித்து
எனை அடைந்திட வா !!!



Comments

Popular posts from this blog

நேசம்

முத்தம்

வாசமல்லிகை