மழை

மண் வாசனை சொல்லியது
நீ வரும் நேரம் இதுவென!

மேகக் கூட்டம் சொல்லியது
நீ மண்ணில் வந்து விழும்
நேரம் இதுவென!

இருமாப்பு கொண்டு இருந்த போது
இடியும் இடித்து சொல்லியது!

தெளிவற்று கிடந்த போது
ஒளியிட்டு மின்னல் கீற்றாய்
என்னுள் பரவியது!

மழையே என் மாமழையே!

வந்து என்னை அணைக்க வா!
உன்னுள் என்னை கலக்க வா!

விதி என்றென்னி கிடக்கவா?
விதையாய் மண்ணில் திளைக்கவா?

மழையாய் பொழிந்து
என்னை மீட்க வா

விளைந்து விளைவை
வரும் விளைவை சந்திப்போம்!
வா மழையே என் மாமழையே வா!!!!

Comments

Popular posts from this blog

நேசம்

முத்தம்

வாசமல்லிகை